யாழ்ப்பாணம், தாவடிக் கிராமம் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்டவர் வசிக்கும் தாவடி கிராமம், நோய் பரவலைத் தடுக்கும் வகையில் முடக்கப்பட்டு சிறீலங்காப் படைகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
குறித்த கிராமத்தில் இருந்து வெளியேறவும் மற்றும் உள்நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை சிறீலங்காப் படையினரால் விடுவிக்கப்பட்டது.